Monday, October 3, 2011

பிரபல பதிவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்

நேற்று தமிழ்மணம் வாராந்திர ரேங்கை வெளியிட்டு விட்டது. அது வழக்கம்தான் என்றாலும், பட்டியலில் வழக்கத்திர்கு மாறான அதிர்ச்சி நிறைய காத்திருந்தது. நீண்ட நெடுங்காலமாக முதலிடத்தில் இருந்து வந்தவர் இருந்த இடமே தெரியாமல் போனது. இன்னும் வேறு சிலரும் காணவில்லை. அவர்கள் அனைவரும் பத்திரிக்கைகளை காப்பியடிது பதிவிட்டதே அதற்கு காரணம் என்று சொல்ல படுகிரது. தமிழ்மணமும் இதுபோன்ற பதிவுகள் திரட்டியில் இருந்து நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே இந்த பதிவர்கள் தரவரிசையில் இருந்து மட்டுமல்ல, தமிழ்மணத்தில் இருந்தே தூக்க பட்டு விட்டார்கள். தமிழ்மணத்தில் அவர்கள் பதிவுகளை இரண்டு நாளாக காணமுடியவில்லை.

இந்த தரவரிசையிலும் கூட இன்னும் 2-3 காப்பியடிக்கும் பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களை மட்டும் ஏன் தமிழ்மணம் கண்டுகொள்ளவில்லை என தெரியவில்லை. இனி வரும் வாரங்களில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் அவர்களும் அரண்டு போய் இருப்பதாக தெரிகிறது. தமிழ்மணத்தில் இருந்து விலக்க பட்ட பதிவர்கள் இனி என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இனி அவர்கள் வலைப்பூக்கள் காத்தாடுமா? இல்லை தொடர்ந்து பிரபலமாக வலம் வருவார்களா? முதலிடத்தில் இருந்த பதிவர் தமிழ்மணம் இல்லாவிட்டாலும் தப்பிவிடுவார். அதே அளவு வாசகர் வருகையை பெறுவார் என்று தோனுகிறது. ஆனால் அவர் போலவே காப்பியடித்து மாட்டி கொண்ட மற்ற பதிவர்கள் நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது. தேறுவார்களா என்பது சந்தேகமே. இதுதான் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை என்பதோ.

இப்போது உள்ள தரவரிசைக்கு வருவோம், இதுவும் தினமும் பதிவு எழுதுபவர்கள் அடங்கிய பட்டியலாகவே இருக்கிறது. எனவே இந்த பட்டியலில் இடம் பெற வேண்டுமானால், அதிகம் எழுதுங்கள். தரமெல்லாம் பின்னர் பார்த்து கொள்ளலாம். அதிகம் எழுதுங்கள், அதிகம் பேருக்கு வாக்களியுங்கள், பின்னூட்டமிடுங்கள். அதுவே தரவரிசையை பிடிக்கும் தராக மந்திரம். புதியவர்களே தளராமல் முயற்சியுங்கள், நாம் சொன்ன வழியை கடைப்பிடியுங்கள் வெற்றி நிச்சயம்.

2 comments:

துரைடேனியல் said...

Arumaiyana pathivu. Enakku 11 vathu idam Sago. Makizhchiyaga irukkirathu.

துரைடேனியல் said...

TM 1.

Post a Comment

கவனம், இப்போது உங்கள் ஐபி நம்பர் எங்களிடம்!