Tuesday, November 8, 2011

மணியானவரின் புதிய அவதாரம்

ஏற்கனவே இரண்டாவது அவதாரம் எடுத்து பதிவுலகை முட்டாளாக்கி மகிழ்ந்த அந்த மணியான பதிவரை பற்றி முன்பே பார்த்திருந்தோம். பல பயங்கர ரணகளங்களுடனும் திடீர் திருப்பங்களுடனும் இரண்டாம் அவதாரம் இனிதே முடித்து வைக்கப்பட்டது. வழக்கமாக திடீர் என்று கானாமல் போய் புது அவதாரம் எடுக்கும் பழக்கம் உள்ள அந்த பதிவர், இப்போது காணாமல் போக போவதாக சொல்லி விட்டே சென்றார். ஆனால் அதற்கு முன்பாகவே தாம் வசிக்கும் தேசத்தின் பெயரில் ஒரு வலைபூ தொடங்கி ரகசியமாக பகுதி நேரமாக நடத்தி கொண்டிருந்தார்.

இப்போது அதை முழு நேரமாக நடத்த தொடங்கிவிட்டாராம். அவரது அனைத்து பதிவுகளுக்கு ஆஜராகும் அவரது நாட்டை சேர்ந்த குழுவும் அங்கே சென்று தங்கள் பணியை தொடங்கிவிட்டனராம். அனைவருக்கும் அந்த பிரெஞ்சுக்கார் தான் மணியானவர் என்றும் தெரியுமாம். இருந்தாலும் மணியானவரின் அன்பான வேண்டுகோளுக்கு இனங்க அதை காட்டி கொள்வதில்லையாம்.  அற்புதம் அற்புதம், எப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்பு இது?

புது வலைப்பூக்கள் ஆரம்பிப்பதும் பின்னர் அதை விட்டு விட்டு இப்படி பெயர் மாற்றி பெயர் மாற்றி வேறு வலைப்பூ ஆரம்பிப்பதும் எதற்கு என்று எமது சிற்றறிவிற்கு இதுவரை விளங்கவில்லை. இவர் ஏதோ ஒரு வில்லங்கமான வேலையை செய்து வருகிறாரோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. எதையும் செய்து தொலையட்டும். அதை பற்றி நமக்கேன் அக்கரை என்று கேட்கிறீர்கள் தானே? என்ன செய்வது ஒவ்வொரு முறையும் இது யாரோ புது பதிவர் என்று எண்ணி, அவர் பின்னூட்டம், வாக்குகள் நமக்கும் கிடைக்கும் என்று எண்ணி அவரை பாராட்டி மகிழும் அப்பாவி பதிவர்களை எண்ணித்தான் நாம் இதுபோன்ற விடயங்களை வெளியிட வேண்டி இருக்கிறது.

பொறுத்திருந்து பாருங்கள். மணியானவர் எப்படியும் எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லையே என்று வெளியே வருவார். ஆனால் கையும் களவுமாக மாட்டினாலும் வெட்கமே படாமல் இன்னொரு வலைப்பூ ஆரம்பிப்பார். அதற்கும் போய் ஆகா, அருமை, சூப்பர், கலக்கல் என்று பின்னூட்டமிட்டு மகிழ்வோம் நண்பர்களே.....