Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Sunday, January 29, 2012

சாயம் வெளுத்த பதிவர்கள்

இரண்டு குள்ள நரி பதிவர்களை பற்றி இன்று விரிவாக பார்க்க போகிறோம். ஒருவர் உங்கள் அனைவருக்கும் தெரிந்த மணியான யோசனை, இன்னொருவர் அவருடைய நண்பர் நாற்றம். இருவரும் தனி தனியா எழுதிகொண்டு இருந்த பொழுது சாதாரணமாக இருந்தார்கள். இருவருக்கும் இடையே கருத்து பரிமாற்றம் ஏற்பட்டு நட்பு வளர தொடங்கிய போது விபரீத போக்கு தலையெடுக்க துவங்கியது. இருவரும் அடாவடியாக கிளம்பினார்கள். இதற்கு இன்னும் சில பதிவர்கள் உடந்தை. எல்லாரும் ஒரே ஊர்காரர்கள். இப்போது புரிந்திருக்கும்.

யோசனையானவர்,  மெதுவடையாக இருந்து பின்னர் திடீர் என்று காணாமல் போய் திரும்ப வந்தது அனைவருக்கும் தெரியும். அதே காலகட்டத்தில் மணமான வரட்டியில் அறிவிலி என்ற ஒருவர் சிலவருடங்களுக்கு பிறகு மறுபடியும் பொறுப்பேற்றார். அவரும் அதே ஊரை சேர்ந்தவர்.  ஊர்காரரை ஊர்காரர்கள் பிடித்து கொண்டார்கள். யோசனையானவர் அறிவிலியின் சினேகத்தை பெற்றார். நாற்றம் பிடித்தவரும் சேர்ந்துகொண்டு சிலபல பேச்சுவார்த்தைகள் திட்டங்கள் அரங்கேறின.

விளைவு மெதுவடையாக காணாமல் போனவர் யோசனையாக அவதாரம் எடுத்தார். அதே நேரத்தில் நாற்றமானவர் பல பதிவர்களை சினேகம் பிடித்து வைத்திருந்தார். சில பதிவர்களுக்கு ப்ளாகில் தொழில்நுட்ப கோளாறை உருவாக்கி, பின் சரி வலிய சென்று உதவுவது போல் உதவி அவர்களது விபரங்களை எடுத்து வைத்து கொண்டார். சில பதிவர்களின் தனி விபரங்களை வேறு ஒரு குறுக்கு புத்தியுடன் தெரிந்து கொண்டு மிரட்டிய அலங்கோலமும் நடந்தது.

யோசனையானவர் மறு அவதாரம் எடுத்து வந்த போது மணத்தில் முன்னிலையில் சில பதிவர்களே வந்து கொண்டிருந்தது அவர் கண்ணை உறுத்தியது. அவர்கள் வேறு காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்ததை கண்டு கொதிப்படைந்தார். உடனே மணத்தில் தமக்கு நெருக்கமானவருக்கு சொல்லி அவர்களை தடை செய்தார். மணமும் காப்பி பேஸ்ட் செய்தவர்களை அப்போதுதான் கண்டுகொண்டது போல் தடை செய்தது. யோசனைகாரர் தம் யோசனையை பயன்படுத்தி அந்த பதிவர்களுடன் பேரம் பேசி, மீண்டும் மனத்தில் இணைத்து கொண்டார். இன்று வரை அந்த பதிவர்கள் மணத்திற்கு பயந்து யோசனையானவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இதில் ஒரு ஆச்சர்யம், ஒரு வருடமாக காப்பி பேஸ்ட் செய்து முன்னணியில் இருந்தவர்களை அதுவரை மணமும் இவர்களும் அறியாமலே அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள்.

அதன் பிறகு சில பதிவர்களுக்கும் மனத்திற்க்கும் பிரச்சனை வந்த போது மேற்கண்ட பதிவர்கள் அறிவிலிக்கு ஆதரவாக நடந்து ஊர் விசுவாசத்தை செலுத்தி மகிழ்ந்தனர். பின்னர் மணத்தையே வம்புக்கிழுத்த மத பதிவர்களுடன் வம்புக்கு சென்றனர். சிலவாரங்கள் சூறாவளி அடித்து ஓய்ந்தது.

இதையெல்லாம் கண்டு நாற்றம் பிடித்தவர் தாம் வளர்ந்துவிட்டதை முடிவு செய்து, அதற்கு மேல் சும்மா இருக்க முடியாமல் மற்ற பதிவர்கள் எப்படி எழுத வேண்டும்  எப்படி எழுத கூடாது என்று அறிவுரை சொல்ல தொடங்கினார். தம் பதிவுகளில் வந்து எதிர்கருத்துரை இடுபவர்களை கும்பலாக மிரட்ட தொடங்கினார்கள். கட்ட பஞ்சாயது செய்பவர்கள் அடியாள் இல்லாமல் செய்யமுடியுமா? யாராவது இப்படி போய் எதிர்கருத்து சொல்லி மாட்டி கொண்டால் போட்டு படுத்தி எடுப்பார்கள். கடைசியாக நாற்றமானவர் வந்து அவர்களது ஐபி நம்பர், முகவரி, தனி விபரங்களை வெளியிட்டு மிரட்டி விரட்டி அடிப்பார். இப்படி ஊர்க்காரகள் தங்கள் தனி ராஜ்ஜியத்தை நடத்தி வந்தனர்.

இந்த சமயத்தில் ஒரு உள்குத்து மன்னன் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருவதை அடியோடு ஒழிக்க எண்ணி ஒரு எதிர்குத்து போட்டார் நாற்றமானவர். யாரும் எதிர்பாராதா வகையில் நெருப்பு பற்றி கொண்டது. அமைதியாக இவர்களின் நடவடிகைகளை கவனித்து வந்தவர்கள் பொங்கி எழுந்தனர். ஊர்காரகள் தனித்து விடபட்டனர். யோசனையானவருக்கு பொறுக்க முடியவில்லை. மிரட்டி சீண்டுவது போல் பதிவு வெளியிட்டார். இதே முறையை எல்லா பிரச்சனைகளிலும் இவர் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரை பற்றி எல்லாரும் தெரிந்து கொண்டதாலோ என்னவோ, இந்த முறை யாரும் கண்டு கொள்ளவில்லை. இன்னமும் அவர் அரும்பாடுபட்டு முயன்று கொண்டிருக்கிறார்.

நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது
நன்மை: குள்ளநரிகளின் சாயம் வெளுத்தது

பிற்சேர்க்கை: இங்கு வருபவர்கள் அனைவருடைய ஐபிநம்பர்களும் கண்கானிக்கப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Monday, October 3, 2011

பிரபல பதிவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்

நேற்று தமிழ்மணம் வாராந்திர ரேங்கை வெளியிட்டு விட்டது. அது வழக்கம்தான் என்றாலும், பட்டியலில் வழக்கத்திர்கு மாறான அதிர்ச்சி நிறைய காத்திருந்தது. நீண்ட நெடுங்காலமாக முதலிடத்தில் இருந்து வந்தவர் இருந்த இடமே தெரியாமல் போனது. இன்னும் வேறு சிலரும் காணவில்லை. அவர்கள் அனைவரும் பத்திரிக்கைகளை காப்பியடிது பதிவிட்டதே அதற்கு காரணம் என்று சொல்ல படுகிரது. தமிழ்மணமும் இதுபோன்ற பதிவுகள் திரட்டியில் இருந்து நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே இந்த பதிவர்கள் தரவரிசையில் இருந்து மட்டுமல்ல, தமிழ்மணத்தில் இருந்தே தூக்க பட்டு விட்டார்கள். தமிழ்மணத்தில் அவர்கள் பதிவுகளை இரண்டு நாளாக காணமுடியவில்லை.

இந்த தரவரிசையிலும் கூட இன்னும் 2-3 காப்பியடிக்கும் பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களை மட்டும் ஏன் தமிழ்மணம் கண்டுகொள்ளவில்லை என தெரியவில்லை. இனி வரும் வாரங்களில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் அவர்களும் அரண்டு போய் இருப்பதாக தெரிகிறது. தமிழ்மணத்தில் இருந்து விலக்க பட்ட பதிவர்கள் இனி என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இனி அவர்கள் வலைப்பூக்கள் காத்தாடுமா? இல்லை தொடர்ந்து பிரபலமாக வலம் வருவார்களா? முதலிடத்தில் இருந்த பதிவர் தமிழ்மணம் இல்லாவிட்டாலும் தப்பிவிடுவார். அதே அளவு வாசகர் வருகையை பெறுவார் என்று தோனுகிறது. ஆனால் அவர் போலவே காப்பியடித்து மாட்டி கொண்ட மற்ற பதிவர்கள் நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது. தேறுவார்களா என்பது சந்தேகமே. இதுதான் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை என்பதோ.

இப்போது உள்ள தரவரிசைக்கு வருவோம், இதுவும் தினமும் பதிவு எழுதுபவர்கள் அடங்கிய பட்டியலாகவே இருக்கிறது. எனவே இந்த பட்டியலில் இடம் பெற வேண்டுமானால், அதிகம் எழுதுங்கள். தரமெல்லாம் பின்னர் பார்த்து கொள்ளலாம். அதிகம் எழுதுங்கள், அதிகம் பேருக்கு வாக்களியுங்கள், பின்னூட்டமிடுங்கள். அதுவே தரவரிசையை பிடிக்கும் தராக மந்திரம். புதியவர்களே தளராமல் முயற்சியுங்கள், நாம் சொன்ன வழியை கடைப்பிடியுங்கள் வெற்றி நிச்சயம்.