Thursday, January 20, 2011

வாங்கடா வாங்க...

விஜயகாந்த் சினிமாவுக்கு தற்காலிகமாக முழுக்குப் போடுகிறார்: செய்தி!
அது என்ன, தற்காலிகமா முழுக்குப் போடுறது? ஒரேடியா முழுக்குப் போட்டுத் தொலைய வேணடியதுதானே? அதுவே அவரை விட்டாப் போதும்னுதான் இருக்கு, இந்த லட்சணத்துல இவரு தற்காலிகமா நிறுத்தி வைக்கிறாராம். ஒழுங்கா அரசியல்ல கவனம் செலுத்தி, உருப்படியா ஏதாவது பண்றதுக்கு வழியக் காணோம், இதெல்லாம் தேவையா? தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இந்த சினிமா பைத்தியம் எப்போ தெளியப் போகுதோ? 

டீவி, பத்திரிக்கை, பேப்பர், அரசியல்னு எல்லாப் பக்கத்துலேயும் இருந்த இந்த சினிமா இப்போ பதிவுகளுக்குள்ளேயும்! ஆமா, தெரிஞ்சத தானே எழுதுவாங்க. நம்ம மக்களுக்கு சினிமாவைத் தவிர வேற என்ன எழவு தெரியும்? எதுக்கெடுத்தாலும் சினிமா, எங்கே போனாலும் சினிமா! தமிழர்கள் ரெண்டு பேரு சந்திச்சுக்கிட்டாங்கன்னா, மூணாவது நிமிசமே பேச்சு சினிமாவுக்குப் போயிடும். ஏன்யா உலகத்தில வேற ஏதுவுமே இல்லையா? 

கொசுறுச் செய்தி:
விஜயக் காந்தின் மகன் பிரபாகரன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க விருப்பம்: 

இந்தச் செய்தியப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல. அப்புறம் உரிமை, சுதந்திரம், மசுருன்னு கிளம்பிடுவானுங்க. 

3 comments:

டக்கால்டி said...

ஹ்ம்ம்... பட்டையைக் கிளப்புங்கள்...எட்டு திக்கும் அதிரட்டும்...

டக்கால்டி said...

Please remove the word verification for comments.Its my small suggestion.

பரதேசித் தமிழன் said...

நன்றி நண்பரே!

Post a Comment

கவனம், இப்போது உங்கள் ஐபி நம்பர் எங்களிடம்!