Friday, December 9, 2011

பதிவர்களின் நேர்மை

சில பதிவர்கள் பிரபல இதழ்களில் வரும் பரபரப்பான கட்டுரைகளை தமது வலைப்புக்களில் போட்டு தமக்கு நல்ல பிரபலம் தேடி குளிர்காய்ந்து வந்ததை அனைவரும் அறிவோம். சமீபத்தில் மணமான திரட்டி அவர்களை எச்சரித்து தற்காலிகமாக நீக்கியதாம். உடனே மடேரென மணத்தின் காலில் விழுந்தவர்கள் இன்னும் எழவே இல்லியாம். மணம் சொன்னதும் தங்கள் காப்பி பதிவுகளை நீக்கி முழுக்க பரிசுத்தம் ஆனார்கள்.

பின் மணத்தின் பின்புலத்தை அனுகி தங்கள் தரப்பு நியாயங்களை சொல்லி கெஞ்சினார்களாம். மணமும் இவர்கள் இல்லாமல் இருந்தால் தரவரிசை பட்டியல் களைகட்டாதே என்று மன்னித்து திரும்ப சேர்த்து கொண்டார்களாம். இப்போது மணத்திற்கு பயந்து பழையபடி தங்கள் காப்பி பதிவுகளை போடமுடியாமல் சொந்த பதிவு போடமுடியாமல் தவிக்கிறார்களாம். காப்பி பதிவுகள் போட இயலாமல்  கைகள் அரிகிறதாம். மீண்டும் மணம் தங்கள் பழைய வேலையை காட்ட அனுமதிக்குமா என்று மறைமுக செய்திக்காக காத்திருக்கிறார்களாம்.

இதற்கிடையே புரட்சி பதிவர் என்று ஒருவர் கிளம்பிவந்து அவர்கள் வண்டவாளங்களை கிழித்து கொண்டிருப்பதால் அவர்கள் மிகவும் கதிகலங்கிபோயிருக்கிறார்களாம். இவ்வளவு நாளும் தரவரிசை, ஹிட்ஸ் வாங்கி சேர்த்த பேரும் புகழும் இப்படி சேதமாகிறாதே என்று கடும் மன உளைச்சலில் இருக்கிறார்களாம். அந்த புரட்சி பதிவர் யார் என்றே கண்டுபிடிக்க முடியாத ஆதங்கத்தில் சந்தேகப்படுபவர்கள் மேல் எல்லாம் எதிர்பதிவு போட்டு கோபத்தை தணித்து கொள்கிறார்களாம். உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கிறான். வேறு என்ன?

பிரபல பத்திரிக்கைகளை காப்பியடித்து இவர்கள் வாங்கிய பிரபலத்திற்கு விலை என்ன? இவர்கள் பாட்டுக்கு எல்லாவற்றையும் அழித்து விட்டு பரிசுத்தமாகிவிடுவார்கள், அங்கே வந்து அருமை, நல்ல பகிர்வு என்று பின்னூட்டம் அளித்தவர்கள் ஓட்டு போட்டவர்கள் எல்லாம் என்ன முட்டாள்களா? தங்கள் வலைப்பூக்களை அழித்து விட்டும் மீண்டும் புதிதாக ஒன்று துவங்கி தங்கள் நேர்மையை நிரூபிக்க முடியுமா?

No comments:

Post a Comment

கவனம், இப்போது உங்கள் ஐபி நம்பர் எங்களிடம்!