Thursday, September 15, 2011

கூடங்குளம் அணுமின்நிலையமும் பொறுப்பற்ற மக்களும்

நமது நாட்டில் மின்சார பற்றாக்குறை தொடர்ந்து அதிகமாகி கொண்டே போவது அனைவரும் அறிந்ததே. மின்சார உற்பத்திக்கு பல்வேறு முறைகள் இருக்கின்றன. வேறு வழி இல்லாமல்தான் அணுமின் உற்பத்தியில் அரசு முதலீடு செய்துள்ளது. மின்சார பற்றாக்குறை வருடா வருடம் உயர்ந்துகொண்டே வரும் நிலையில் அரசு எல்லா சாத்திய கூறுகளையும் பார்க்க வேண்டி உள்ளது.

நம் நாட்டில் மற்ற மின்சார உற்பத்தி முறைகளுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இருப்பினும் ஏராளமான இடங்களில் எரிவாயு, அனல் மின்சார உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டுதான் வருகின்றன. ஆனால் அதுவும் போதாத நிலை. அந்த அளவுக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே அதன் பகுதியாக அணுமின்சார நிலையங்களும் தொடங்கப்டுகின்றன.

கூடங்குளம் திட்டம் 1988 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு பல தாமதங்களுக்கு பின் தொடங்கப்பட்ட போது மகிழ்ச்சியோடு ஆதரவளித்தவர்கள், இத்தனை ஆண்டுகள் ஆனபின்பு இப்போது வேண்டவே வேண்டாம் என்று எதிர்க்கிறார்கள். அணுமின் நிலையம் ஆபத்தானதாம். ஜப்பான் சுனாமியால் நடந்தவற்றை பார்த்தவுடன் எல்லாருக்குமெ அணு உலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பயம் வந்து விட்டது. ஜப்பானாலேயே செய்ய முடியாத பாதுகாப்பை நாம் சரியாக செய்துவிடுவோமா என்ற பயம் தான்.

இது நியாயமாக இருந்தால் கல்பாக்கம் மக்களும் போராட்டம் செய்ய வேண்டும் அல்லவா? கல்பாக்கத்தையும் நிறுத்தி விட்டால் 1000 மெகாவாட் பற்றாக்குறை வந்துவிடும். அப்புறம் எல்லாரும் தினமும் 10 மணி நேரம் மின்சாரம் இல்லாம இருக்கனும். தயாரா? அந்த மின்சாரத்தை மட்டும் சுகமாக அனுபவித்து கொண்டு இப்போ கூடங்குளத்தை மட்டும் எதிர்க்கிறீங்களே ஏன்? நீங்கள் மட்டும் என்ன அவ்வளவு புத்திசாலிகளோ? மூடு என்றவுடன் மூடிவிட்டு போக அது என்ன நேற்று ஆரம்பிக்க பட்ட பொட்டிக்கடையா? 10000 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் செலவு செய்யப்பட்டு 20 வருடங்களாக கஷ்டப்பட்டு செய்துமுடிக்க பட்ட அணு உலை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாது. மக்களும் இறங்கி வரவேண்டும். பின்னால் இருந்து தூண்டிவிடுபவர்கள் யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கவனம், இப்போது உங்கள் ஐபி நம்பர் எங்களிடம்!